Jun 19, 2010

ரூ.99ல் பிராட்பேண்ட் சேவை வழங்குகிறது பிஎஸ்என்எல்

இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களில், இணையதள சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, கிராமப்புற மக்களுக்கு பிராட்பேண்ட் வசதியை ரூ.99க்கு வழங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. கிராம மக்களுக்கு இணையதள அறிவை பெருக்கும் பணியில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, பிபிஜி ரூரல் யுஎஸ்ஓஎப் 99 திட்டத்தில் 2 எம்பிபிஎஸ் திறனுடைய இன்டர்நெட் இணைப்பும், இலவசமாக 400எம்பி வரை பயன்படுத்தத்தக்க வசதியும் இதில் உண்டு. பிபிஜி ரூரல் யுஎஸ்ஓஎப் 150 திட்டத்தில் 2 எம்பிபிஎஸ் திறனுடைய இன்டர்நெட் இணைப்பும், இலவசமாக 1 ஜிபி வரை பயன்படுத்தத்தக்க வசதியும் இதில் உண்டு