ஏடிஎம்மில் பணம் வழங்காமல் கணக்கில் ரூ.3,000 குறைத்த வங்கி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் கிரீஷ். இவர் 2005ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஏடிஎம்மில் ரூ.3,000 எடுக்க சென்றார். பணம் வரவில்லை. ஆனால், கிரீஷ் கணக்கில் இருந்து ரூ.3,000 குறைந்திருந்தது.புகார் செய்தும் ஓர் ஆண்டுக்குப் பிறகு 2006ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அவரது கணக்கில் ரூ.3,000 வரவு வைக்கப்பட்டது. வங்கி சேவையில் குறைபாடு உள்ளது என்று கூறி, சென்னை வடக்கு மா வட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். வழக்கறிஞர் அகிலா வாதாடினார். வங்கியின் இந்த சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.20,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.சம்பந்தப்பட்ட கீழ்பாக்கம் இந்தியன் வங்கி கிளை, ராயப்பேட்டை தேனா வங்கி கிளை ஆகியவை இணைந்து ரூ.10,000 அளிக்க உத்தரவிடப் பட்டது.
Oct 24, 2009
பணம் வழங்காத ஏடிஎம் கணக்கில் பணத்தை குறைத்த வங்கிகளுக்கு 10,000 அபராதம்
ஏடிஎம்மில் பணம் வழங்காமல் கணக்கில் ரூ.3,000 குறைத்த வங்கி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் கிரீஷ். இவர் 2005ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஏடிஎம்மில் ரூ.3,000 எடுக்க சென்றார். பணம் வரவில்லை. ஆனால், கிரீஷ் கணக்கில் இருந்து ரூ.3,000 குறைந்திருந்தது.புகார் செய்தும் ஓர் ஆண்டுக்குப் பிறகு 2006ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அவரது கணக்கில் ரூ.3,000 வரவு வைக்கப்பட்டது. வங்கி சேவையில் குறைபாடு உள்ளது என்று கூறி, சென்னை வடக்கு மா வட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். வழக்கறிஞர் அகிலா வாதாடினார். வங்கியின் இந்த சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.20,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.சம்பந்தப்பட்ட கீழ்பாக்கம் இந்தியன் வங்கி கிளை, ராயப்பேட்டை தேனா வங்கி கிளை ஆகியவை இணைந்து ரூ.10,000 அளிக்க உத்தரவிடப் பட்டது.
