Oct 3, 2009

விரைவில் வருகிறது: செக் ரீடிங் ஏ.டி.எம்.,

இந்தியாவில் விரைவில் செக்(காசோலை) ரீடிங் ஏ.டி.எம்., வரவுள்ளது. இந்த ஏ.டி.எம்., மூலம் காசோலை சம்பந்தப் பட்ட பரிமாற்றங்களை ஏ.டி.எம்., மூலமாகவே பெற்று கொள்ளலாம்.

இது தற்போது, வட அமெரிக்க மற்றும் யுரோ உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை ஏ.டி.எம்.,கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதனை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்திய வங்கிகளான ஸ்டோட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பீ.ஐ. வங்கி, ஐ.என்.ஜி., வைஷியா உள்ளிட்ட வங்கிகள் செக் ரீடிங் ‌ஏ.டி.எம்.,மை இந்தியாவில் அறிமுகப் படுத்தும் ஆர்வத்தில் இருந்து வருகின்றன. இதற்கு ரிசர்வ் வங்கியும் வரவேற்பு அளித்து வருகிறது. எனவே, நம் நாட்டிலும் விரைவில் செக் ரீடிங் ஏ.டி.எம்.,களை எதிர்பார்க்கலாம்.